அரசாணை 100 ஐ திருத்தம் செய்ய கோரி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர்,தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசாணை எண் 100 ,பிரிவு 6 உட்பிரிவு 17-ல் ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பிரிக்கப்பட்ட நிறுவனத்தில் பணபுழக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதை பின்பற்ற கூடாது, என தெளிவாக இந்த ஒப்பந்தத்தில் உறுதியளிக்கவேண்டும்.
பஞ்சாப் மாநில ஒப்பந்தத்தில் உள்ளவாறு மின்வாரிய கம்பெனியை மேலும் பல கம்பெணிகளாக பிரிக்கமாட்டோம், அரசு நிறுவனமாகவே இயங்கும் என பஞ்சாப் மாநில அரசு உறுதியளித்துள்ளது.இதேபோல் தமிழ்நாடு அரசும் ஒப்பந்தத்தில், உறுதியளிக்கவேண்டும்.மின்வாரிய உத்தரவு 2- ஐ ரத்து செய்யவேண்டும்.தற்போது வழங்கியுள்ள வரைவு நகலில் ஊதிய உயர்வு தொடர்பாக தொழிலாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் 4 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பது தொடரும் என உறுதி செய்யவேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மின்வாரியஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.
மாநில துணைத்தலைவர் பி.ஜீவா மாவட்ட செயலாளர் தீ.லெனின் மகேந்திரன் ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜி.பி.விஜயன் மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்

