பெருமாள்கோயில்மேடு- பட்டாளம்மன் கோயில் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வலியுறுத்தல்.
பெருமாள் கோயில் மேட்டிலிருந்து பட்டாளம்மன் கோயில் வரை உள்ள மண்சாலையை தார் சாலையாக மாற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குபட்டது தடங்கம் ஊராட்சி இந்த ஊராட்சி தருமபுரி நகரத்தை ஒட்டியுள்ளது.தடங்கம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெருமாள் கோயில்மேடு பட்டாளம்மன் கோயில் வழியாக தருமபுரி நகருக்கு செல்லும் சாலை உள்ளது.குறிப்பாக பெருமாள் கோயில் மேட்டிலிருந்து பட்டாளம்மன் கோயில் வரை செல்லும் சாலை சுமார் 1 கிலோமீட்டர் ஆகும் நகர விரிவாக்கத்தின் காரணமாக இங்கு குடியிருப்புகள் விரைவியுள்ளன.
சுமார் 6 மாதத்திற்கு முன் இந்த மண் சாலையில் ஜல்லி கொட்டப்பட்டு சாலைமுழுவதும் பரப்பி விடப்பட்டது.ஆனால் தார் சாலை அமைக்கவில்லை. இந்த ஜல்லி நிறைந்த சாலையில் மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் சிலநேரங்களில் விபத்துக்குள்ளாகின்றனர்.நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது ஜல்லி நடந்து செல்வோர் மீது விழுகின்றது.எனவே இச்சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
