தேனிகுடிமக்கள் விழிப்புணர்வு, கண்காணிப்பு ஆலோசனைக் கூட்டம்.
குடிமக்கள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்.தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி செல்வம் திருமன மண்டபத்தில்நடைபெற்றது. தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில், தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்,கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் ,ஆண்டிப்பட்டி பேரூராட்சித் தலைவர் ,தலித் அமைப்புகளின் தலைவர்கள்,தன்னார்வ குழுக்களைச் சார்ந்தவர்கள்,தேனி மாவட்ட தேன் சுடர் பெண்கள் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.ந்நிகழ்வில்,தலித் விடுதலை இயக்கத்தின் தேனி மாவட்ட அமைப்பாளர் செளந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வும்,மாநில அரசால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அவசியம், தீருவுதவித் தொகை மற்றும் அரசு வேலைவாய்ப்பு,குடும்ப ஓய்வுதியம், TA/DA போன்றவைகளில் நீதிமன்றம் காவல் துறை அரசு செய்ய வேண்டிய கடமைகள், மாநிலம் ழுழூமையாக வருவாய் கோட்டா அளவிலான விழிப்புரணர்வு கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
