தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டபத்தில் தூய்மை பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்திட்டமுகம்நடைபெற்றது.

அதன்ஒருபகுதியாகபாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் அமைந்துள்ளது. அதில் பென்னாகரம் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் தூய்மை குறித்து விளக்கிப் பேசினார். பின்னர் அவரே மணிமண்டபத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை வைத்தார். இறுதியில் சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தின் காப்பாளர் சரவணன், நினைவு பரிசாக தியாகி சுப்ரமணிய சிவாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தினை வழங்கினார். இதில் ஓ ஜி அள்ளி பஞ்சாயத்து ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி சேது முருகன், வருவாய் ஆய்வாளர் சுஜாதா, கிராம நிர்வாக அலுவலர் சேட்டு, பஞ்சாயத்து செயலாளர் சண்முகம் ,நாட்டு நல பணிகள் திட்ட முனைவர் கதிர்வேல் உதவியாளர் சந்திரபாபு மற்றும் தூய்மை பணியாளர் என பலர் கலந்து கொண்டனர்.
