பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்ககோரி மறியல் போராட்டம்.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ,பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலுள்ள ஒருங்கிணைந்த அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களை கணக்கிட்டு அரசாணை நிலை எண்:20,நாள் 24/7/2023ஐ பின்பற்றி அதில் பார்வையற்றோர்களுக்கு 1 சதவீத இடஒதுக்கிட்டை சிறப்பு ஆசிரியர் தகுதித்தோர்வு,சிறப்பு முதுகலை ஆசிரியர் தேர்வு , ஆசிரியர் நியமனம் வழங்கவேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் நேர்ச்சிப்பெற்றுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனத்தை தேர்விலிருந்து முழுமையாக விலக்களித்து உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பார்வை மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அரசு குறிப்பிட்டுள்ள தொகுதி 1 முதல் 8 வரை உள்ள (ஏ,பி,சி,டி) பிரிவுகளில் அமைந்து துறைகளிலும் பணியாற்றும் மொத்த பணியாளர்களை கணக்கிட்டு டு 1 சதவீத இடஒதுக்கீட்டு அடிப்படையில் 1,000 பார்வையற்ற பணி நாடுநரகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகள் 23 பல்கலைக்கழகங்கள் மற்றும் 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் மொத்த பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களை கணக்கிட்டு இட ஒதுக்கீட்டு சிலட்,நெட்,தேர்வுகளில் தேர்ச்சியடைந்து பணிவாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் 300 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி பேராசிரியர் பணி வழங்க வேண்டும்.
கவுரவவிரிவுரையாளர்கள் பகுதி நேர இசையாசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அணைத்து பார்வைவமாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை நிலை.எண்: 151/2008 ஐ பின்பற்றி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
தமிழக அரசு பார்வையற்றோருக்கு வழங்கியுள்ள சான்றிதழ் படிப்பு தொழில் கல்வி முதல் முனைவர் பட்டம்
வரையிலான அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கட்டணம் தேர்வுகட்டணம் மற்றும் பல்கலைக்கழக கட்டண விலக்குகளை
தமிழகத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களும் முறையாகயும் ஒரே மாதிரியாகவும் பின்பற்ற அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்திடவேண்டும்.
பார்வையுள்ளோர்களுக்கு இணையாக பார்வையாற்றுத்திறனாளிகளும் வாசிப்பு உள்ளிட்ட கல்வி சார்ந்த பணிகளை தடையின்றி மேற்கொள்ள அனைத்து பட்டம் பயிலும் மற்றும் பட்டம் படித்த பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும்.
வேலையில் இல்லாதோருக்கான உதவித் தொகையை ரூ1000 ல் இருந்து ரூ 5,000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் உவிலைவாசி ஏற்றத்தை கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்களில் மாதந்திர உதவித் தொகை
வழங்குவது போல் தமிழகத்திலும் ரூ 1500 லிருந்து ரூ 5000 உயர்த்தி வழங்க வேண்டும். உள்ளிட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரகம் முன்பு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தின் சார்பில் பிப்-12ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு ஆதரவாக இச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ்,வெற்றிவேல் முருகன்,ஞானமூர்த்தி ,முனுசாமி உள்ளிட்ட 25 கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தருமபுரி – சேலம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுபின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் மறியலை கைவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

