அனுமதியின்றி நொரம்புமண் கடத்தல்:டிப்பர் லாரி பறிமுதல், ஒருவர் கைது.
தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரப்பட்ட புகார் மனுவின் பேரில் பிப் -20ம் தேதி காலை தருமபுரி அருகே உள்ள பள்ளக்கொல்லையில் தருமபுரி நகர போலீசார் வாகன ஆய்வு செய்தனர்.அப்போது தருமபுர் குப்பூர் கிராமத்தை சேர்ந்த காளி 45,என்பவர் தனது டிப்பர் வாகனத்தில் அனுமதியின்றி நொரம்பு மண் ஏற்றி வந்தததுள்ளார்.போலீசாரை கண்டதும் வண்டியை நிறுத்திவிட்டி தப்பி ஓடியுள்ளார்.
திருட்டுத்தனமாக அனுமதியின்றி நொரம்புமண் கடத்துவது தெரியவந்தது.
இந்த வாகனத்தை கைபற்றி போலீசார் வேறு ஓட்டுநர் உதவியுடன் நகரகாவல்நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.பின்னர்.
அரசு அனுமதியன்றி 3 யூனிட் நொரம்பு ஏற்றி வந்த டிப்பர் லாரி வாகனத்தின் ஓட்டுநர் காளி மற்றும் வாகன உரிமையாளர் மீது, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யபட்டது.
