தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் மன்ற விழா
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி கலையரங்கில் விலங்கியல் துறை மன்ற விழா நடைபெற்றது.
கல்லூரியில் விலங்கியல் துறை தலைவர் முனைவர் கே விஜயதேவன் வரவேற்றார்.கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ. கண்ணன் தலைமை உரையாற்றினார்.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக, தகடூர் அதிகமான் வரலாற்றுச் சங்க செயலாளரும், தகடுர் புத்தக பேரவை தலைவருமான மரு.இரா.செந்தில்சிறப்புரையாற்றினார்.
அப்போது மாணவ மாணவர்களுக்கு படிப்பின் அவசியம்,நன்னடத்தை, உள்ளிட்ட சமூக நீதி கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஓவியப்போட்டி, கவிதை போட்டி, சிறுகதை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விலங்கியல் துறை தலைவர் முனைவர் கே விஜயதவன் மற்றும் பேராசிரியர்கள்,கௌரவ விரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள் செய்திருந்தனர் விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஜீவிதா நன்றி கூறினார்.

