“உங்கள் ஊரில் உங்களைத் தேடி”முகாமில் 89 மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்திய தருமபுரி எஸ்பி.
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் “உங்கள் ஊரில் உங்களைத் தேடி” திட்டத்தின் அடிப்படையில் பென்னாகரம் உட்கோட்ட பகுதியில் பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன்ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், 98 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 98 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது மேலும் இன்று புதிதாக பெறப்பட்ட மனுக்கள் 59 பெறப்பட்டது.
முகாமில் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் பென்னாகரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உத்தமச்செல்வன் யுவராஜ் மற்றும் புகார்தாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

