வனவிலங்கை வேட்டையாட முயன்றவருக்கு ரூ 1 இலட்சம் அபராதம்
தருமபுரி வனச்சரகம், தொப்பூர் பிரிவு, தொப்பூர் காப்புக்காடு, பாளையம்புதூர் காவல் சுற்று எல்லைக்குட்பட்ட போன்டாகாரன் பள்ளம் சராகத்தில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஒரு பை மற்றும் கத்தியுடன் காட்டில் நடமாடுவது தெரிந்து வனத்துறையினர் மேற்படி நபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது தாதநாய்க்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன்கைதுசெய்யப்பட்டார்.இன்னொரு நபர் தப்பியோடினார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று விசாரித்த போது வனப்பகுதியில் மறைத்த பை, கத்தி மற்றும் 15 கண்ணி வலைகளை வனத்துறையினர் கைப்பற்றினர். மேலும் விசாரணை செய்த போது தப்பியோடியது குறிஞ்சிநகர் முருகன் என்பது தெரியவந்தது பின்னர் கைது செய்யப்பட்ட முருகனை தருமபுரி மாவட்ட வன அலுவலர், அவர்கள் முன் ஆஜர்படுத்தி, மாவட்ட வன அலுவலர், உத்தரவுபடி பிடிபட்டவருக்கு , வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக இணக்க கட்டணமாக ரூ. 1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம்) விதித்து அரசு கணக்கில் சேர்க்கப்பட்டது.
