மணவளர்ச்சி குனறியோருக்கான தொழிற்பயிற்சி இல்லத்தில் ஆட்சியர் கி.சாந்தி திடீர் ஆய்வு
தருமபுரி அருகே குண்டலப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நிதியுதவியுடன் லிட்டில் ஹார்ட்ஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வரும் 18 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய ஆண்களுக்கான இல்லத்தினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொழிற் பயிற்றுநர்கள் நவீன காலத்திற்கு ஏற்றவாறு, தொழிற்பயிற்சிகளை பயின்று இல்லவாசிகளுக்கு கற்பிக்குமாறும் மேலும் இல்லத்தின் சுற்று புறத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும், இல்லத்தில் தங்கியுள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை நல்ல முறையில் பராமரிக்குமாறு தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
மேலும், இல்லத்தில் 52 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் தங்கி இருந்தனர், இவர்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துரையாடினார்கள்.
இந்த இல்லத்தில் அனைத்து பணியார்களும் வருகை புரிந்து இருந்தனர்.
மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆண்களுக்களுக்கு ஒயர் கூடை பின்னுதல் மற்றும் மிதியடி செய்தல் ஆகிய தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின் போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் ஜெயசெல்வம் லிட்டில் ஹார்ட் ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில், விஜயலட்சுமி,செம்மான்டகுப்பம் ஊராட்சி மன்றத்தலைவர் பானு பூமணி,மாவட்ட கவுன்சில் சரவணன், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.

