அன்னதானத்திற்கு உண்டான பொருட்களை அரசு வழங்க வேண்டும்.சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்.

தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் உள்ள,தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோயில் வளாகத்தில்,சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் மாவட்ட செயற்க்குழு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமைை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பொதுச் செயலாளர் ஜெயராமன் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் மற்றும் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
இதில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பில் தருமபுரி மாவட்டம் வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆண்டுதோறும் 2 மாதம் மட்டும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கி வரும் நிலையில், ஆண்டு முழுவதும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தமிழக அரசு ,அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதிலும் உறுப்பினர்கள் சேர்க்கையை, நிர்வாகிகள் அதிகப்படுத்த வேண்டும்.
விழாக்காலங்களில் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், குடிநீர், உணவு மற்றும் போதிய அடிப்டை வசதிகள் செய்து தர செய்யவேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ஏராளமான உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக உயிரிழந்த கேரள பந்தளம் அரண்மனை தலைவர் சசிகுமாரவர்மா திருவுருவப் படத்திற்கு இக்கூட்டத்தில் மலர்தூவிஅஞ்சலிசெலுத்தப்பட்டது.முடிவில் ஒன்றிய தலைவர் சென்னையன் நன்றி கூறினார்.
