தருமபுரி தம்பி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா.

தம்பி பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் மழவைதமிழமுதன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.
தம்பி பதிப்பகத்தின் உரிமையாளர் யாழ்திலிபன், தலைமை வகித்தார்.திராவிடர் கழக இளைஞர் அணி மாநில நிர்வாகி மா.செல்லதுரை வரவேற்றார்.
திமுக முன்னாள் தொண்டரணி மாநில அமைப்பாளர் முனைவர்.மு.ராஜேந்திரன் நூல்களை வெளியிட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் த.கு.பாண்டியன் பெற்றுக்கொண்டார்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மண்டலசெயலாளர் உங்கள் விமர்சனம் அக்கரையுடையதா? என்ற நூல்குறித்து மதிப்புரையாற்றினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின
மாவட்ட செயலாளர் சிங்காரவேல் ஜாதியை அழகுபடுத்தும் அரசியல் என்ற நூல் குறித்து மதிப்புரையாற்றினார்.
நூலாசிரியர் மழவை தமிழமுதன் ஏற்புறையாற்றினார். இ.சமரசம் இணைப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் விடுதலைச்சிறுத்தைகள் விவசாயிகள் பிரிவு மாநிலதுணைத்தலைவர் கிள்ளிவளவன்,மாவட்ட துணைசெயலாளர் ஆதித்தமிழன்,பொறியாளர் அணி மாநில நிர்வாகி செந்தில் குமார், ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
ப.பெரியார்,நன்றி கூறினார்.


