சர்வதேச திரைப்பட விழாவில்
கொட்டுக்காளி’திரைப்படம் திரையிடப்பட்டது.

பெர்லினில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘கொட்டுக்காளி’திரைப்படம் திரையிடப்பட்டது.

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் பெறுகிறது ‘கொட்டுக்காளி’. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கும் இந்தப் பெருமைமிகு படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்க சூரி, அன்னா பென் மற்றும் பலர் தங்களது திறமையான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஒரு திரைப்படம் தேர்வாகி திரையிடப்பட்டது.என்பது உலக அளவில் ஒட்டுமொத்த திரைப்படத் துறையினருக்கும் பெருமை மிகு அடையாளமாக அமைகிறது.
நன்றி தெரிவித்த சூரி
உலக அரங்கில் கொட்டுக்காளி!!

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாடியது பெரும் மகிழச்சி!

நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் தம்பி வினோத்ராஜுக்கும் தம்பி சிவகார்த்திகேயன்க்கும் நன்றி!
என நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள அவர் சர்வதேதிரைப்படவிழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தினை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

