தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டள்ள செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி, இப்பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்து அக்கட்சியின் தலைமை நியமித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அவர் பொறுப்பேற்பார்.
தமிழக காங்கிரஸுக்கான கே.எஸ்.அழகிரியின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது. அதேவேளையில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கும் காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும்
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டின்புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர்
செல்வப்பெருந்தகை
அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர்
கே.எஸ்.அழகிரி
அவர்களது எதிர்காலப் பணிகள் சிறக்கவும் – காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் அவர்களது செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன்.
இணைந்து பயணிப்போம்! #INDIA-வை வெற்றிபெறச் செய்வோம்!
என தனது எக்ஸ் பக்கத்தில் தொரிவித்துள்ளார்.
