தொப்பூரில் விபத்துக்குள்ளான கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு
கேரள மாநிலம், இடுக்கியை சேர்ந்த சித்திசன், (55) இவருடைய மனைவி டென்சி, (45)இருவரும் அவர்களுடைய காரில், கர்நாடக மாநிலம் பெங்களுர் நோக்கி சென்றனர். அப்போது, தருமபுரி மாவட்டம் வழியாக, தொப்பூர் அடுத்த வெள்ளக்கல் பகுதியில் வந்தபோது, கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து வந்த, போலீசார் விபத்துக்குள்ளான காரிலிருந்த இருவரையும் மீட்டனர். அதில், சித்திசனுக்கு கால் முறிவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சமயத்தில், கார் திடீரென தீபற்றியது. தருமபுரியிலிருந்து வந்த தீயணைப்பு துறையினர், தீ பற்றி எரிந்த காரின் மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்து, தீ மேலும் வனபகுதிக்கு பரவாமல் அணைத்தனர். விபத்து குறித்து, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

