“மக்களுடன் முதல்வர்” அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கள் தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பயானாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப.,பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை (16.02.2024) வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் /பெ.சுப்பிரமணி, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் டி.தழிழ்செல்வன்,தருமபுரி நகராட்சி ஆணையாளர் சோ.புவனேஸ்வரன், நகர்மன்ற துணைத்தலைவர் அ.நித்யா, தடங்கம் ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா முருகன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

