தருமபுரி அரசு கல்லூரியில் தமிழ் இலக்கியமன்ற விழா
தருமபுரி அரசு கலைக் கல்லூரித் தமிழ்த்துறையில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.

இதில் பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இரா. வசந்தமாலை கலந்துகொண்டு ” “இசைத்தமிழ் உலகு” என்னும் பொருளில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் ஆகியவற்றை இசையோடு பாடி மாணவர்களுக்கு இசைத்தமிழ் பற்றி விரிவாகப் பேசினார்.

இவ்விழாவிற்கு, கல்லூரி முதல்வர் முனைவர் கோ.கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.சங்கர் வரவேற்றார். முன்னதாக நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் சி. கணேசன், முனைவர் ப.சி.சரவணன், முனைவர் கு. சிவப்பிரகாசம், முனைவர் பா.குப்புசாமி மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இவ்விழாவை பேராசிரியர் முனைவர் அ.கௌரன் ஒருங்கிணைத்தார். இளநிலை மூன்றாமாண்டு மாணவி மா.ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

