மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  அதிரடி மாற்றம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  அதிரடி மாற்றம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
கல்வி & வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  அதிரடி மாற்றம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

Social Vision
Last updated: 2024/02/16 at 5:03 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  அதிரடி மாற்றம். பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
 
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என முறையே 5 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, 500 மதிப்பெண்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தலா 100 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில்  500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு , கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தை அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது.
தமிழ் அல்லாமல் பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள், பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக  படிக்காமலேயே உயர்கல்விக்கு சென்று விடுகிறார்கள் என புகார் தெரிவிக்கப்பட்டது.
 இதனால் தமிழ் மொழி தொடர்பாக எந்தவித பொது அறிவும் இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும், தமிழ் தேர்வு எழுத வேண்டும் என்ற அடிப்படையில், அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழை தாய் மொழியாக இல்லாத மாணவர்கள், தங்கள் மொழி பாடத்தை படிக்க வேண்டும் என்று விரும்பியதால், பிறமொழியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள், அவர்களது மொழி பாடத்தை, தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை தொடர்ந்து  நான்காவது விருப்ப படமாக படிக்கலாம் என்றும், ஆனால் அதில் பெறக்கூடிய மதிப்பெண்கள் தேர்ச்சிக்கு கணக்கில் கொள்ளப்படாது என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து தங்களது மொழிக்கான தேர்வில் மதிப்பெண்கள்  கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது, அவமதிப்பதாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில், சிறுபான்மை சமுதாய அமைப்புகள்  வழக்கு தொடர்ந்தன.  அந்த வழக்கில், விருப்ப பாடத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கி, தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது .
அதன் அடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தற்போது அரசாணை வெளியிட்டிருக்கிறார்.  அதில், நான்காவது விருப்ப படமாக இடம் பெறும் தமிழ் அல்லாத பிறமொழி பாடங்களுக்கு,  35 மதிப்பெண்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்கள் என்றும், இந்த மதிப்பெண் இனி தேர்ச்சிக்குரிய கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டில் (2024-2025)  இருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தை விருப்பப்படமாக தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டிலிருந்து ஒட்டுமொத்தமாக 6 பாடங்கள் 600 மதிப்பெண்கள் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.  மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் 5 பாடங்கள்  500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Social Vision February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத் துறையினர் திடிர் ஆய்வு

March 27, 2025
இந்தியா

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல்-239-வது முறையாக மனுதாக்கல்.

March 20, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் சிங்காபுரம் மக்களுக்கு மீன்பிடி உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

June 16, 2024
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 95 நபர்களுக்கு பணி ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

June 25, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
குழந்தைகள் உலகம்

திருக்குறள் ஒப்புவித்தல்  போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பாராட்டு

December 31, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

November 7, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

November 7, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?