மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி பொது வேலைநிறுத்தம் மறியல் போராட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி பொது வேலைநிறுத்தம் மறியல் போராட்டம்.
மாவட்டங்கள்

தருமபுரி பொது வேலைநிறுத்தம் மறியல் போராட்டம்.

Social Vision
Last updated: 2024/02/16 at 3:49 PM
Social Vision
Share
3 Min Read
தருமபுரி பொது வேலைநிறுத்தம் மறியல் போராட்டம்.
SHARE

மக்கள் விரோத தொழிலாளர் விரோத மோடி அரசை கண்டித்து தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி ,அரூர்,பென்னாகரம் ஆகிய இடங்களில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தருமபுரி அஞ்சல் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம்
தருமபுரி அஞ்சல் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம்

தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 26,000/- குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்,நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும்,வேளாண் விளை பொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவில் 50 சதவிகிதம் கூடுதல் விலை வழங்கி சட்டம் இயற்ற வேண்டும்,மின்சார சட்ட திருத்த மசோதாவை இரத்து செய்ய வேண்டும்,கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் சிறு,குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும்,ரயில்வே பாதுகாப்பு மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது,அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்,ஒப்பந்த தொழிலாளர் முறையை முற்றாக கைவிட வேண்டும்,கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை. குறைந்தபட்ச நாள் ஊதியம்,ரூ.600/- உறுதி செய்திட வேண்டும். இத்திட்டம் நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜிவா தலைமைவகித்தார்.

அரூர் நான்கு ரோடு சாலையில்  மறியல் போராட்டம்
அரூர் நான்கு ரோடு சாலையில் மறியல் போராட்டம்

மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு,எல்பிஎப் மாவட்ட தலைவர் அன்புமணி, மாவட்ட செயலாளர் சண்முகராஜா,ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் சிவலிங்கம் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே.மணி,மாவட்ட தலைவர் ஏ.மாதேஸ்வரன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கே.என்.மல்லையன் , எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் சிவலிங்கம், ‌‌‌யுடியுசி மாநில நிர்வாகி இ.பி.புகழேந்தி,மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முன்னதாக பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஊர்வலமாக துவங்கி தலைமை தபால்நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.
ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை

அரூர் ரவுண்டானா அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் கே பி பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ .குமார் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ. அருச்சுனன், மாவட்ட பொருளாளர் சி. வஞ்சி, ஒன்றிய செயலாளர் ஏ .நேரு, தலைவர் எம். புத்தன்,  மலை சங்க மாவட்ட நிர்வாகி எஸ். கே கோவிந்தன், கே. என். ஏழுமலை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ் .தீர்த்தகிரி,
மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆர் .மல்லிகா, ஒன்றிய செயலாளர் தனலட்சுமி, வி ஜெயகாந்தன், கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் இ. கே .முருகன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் குமரேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மொரப்பூர் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரூர் ஒன்றிய செயலாளர் பி .குமார், தமிழ்நாடு தென்னை விவசாயம் சங்க மாவட்ட அமைப்பாளர் பொன்னுசாமி,
கவிஞர் நவகவி, எல்பிஎப் மாவட்ட நிர்வாகி ஜே.பழணி,சிஐடியு மாவட்டதுணைசெயலாளர்கள் சி.ரகுபதி, ஆணஸ்ட்ராஜ்,ஆகியோர் பங்கேற்று பேசினர்.மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர். பென்னாகரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஏஐடியுசி கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ஏ.சி.மணி தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்ட நிர்வாகி மனோன்மணி,வெங்கட்டேசன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எம்.குமார் துணைசெயலாளர் அன்பு ஐஎன்டியுசி நிர்வாகி தர்மலிங்கம்,எல்பிஎப் நிர்வாகி வெற்றிவேல்,ஆகியோர் பங்கேற்று பேசினர்.மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.

TAGGED: மறியல் போராட்டம்
Social Vision February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொழில்

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 

June 19, 2025
சினிமா

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஷாலினி அஜித் வெளியிட்ட அப்டேட்.

February 11, 2024
அரசு நல திட்டம்

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு 3 வேலை உணவு கிடைக்கும்  திட்டம் தொடக்கம்

December 12, 2024
ஆன்மிகம்

நலிவடைந்த குருசாமிகளுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் 

June 6, 2024
தமிழ்நாடு

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழஙககோரி மறியல் போராட்டம்.

February 21, 2024
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
மாவட்டங்கள்

டாஸ்மாக் கடை திறக்க எத்ர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.

February 16, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.

February 12, 2026
மாவட்டங்கள்

ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 11, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை

February 11, 2026
மாவட்டங்கள்

கும்பளப்பாடி கிராமத்தின் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள் தர்ணா போராட்டம் 

February 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?