மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்.
அரசு நல திட்டம்

827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்.

Social Vision
Last updated: 2024/02/16 at 3:25 PM
Social Vision
Share
3 Min Read
அரசு நல திட்டம்
SHARE
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சியின் வாயிலாக “மக்களுடன் முதல்வர்” திட்டப்  பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்  விழா நடைபெற்றது. இவ்விழால் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ,827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரசு நலதிட்ட உதவிகள்
அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் சென்று சேர நடைமுறைப்படுத்தப்பட்ட “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ்  பெறப்பட்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது தீர்வுகாணப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து தருமபுரியில் நடைபெற்ற விழாவில் தருமபுரி நாகரட்சியின் சார்பில் 161 பயனாளிகளுக்கு தெருவோர வியாபாரிகள் கடன் உதவிகள், சொத்து வரி பெயர் மாற்றம், சொத்து வரி நிர்ணயம் செய்தல், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட ரூ.20,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் பேரூராட்சிகளின் துறையின் சார்பில் 67 பயனாளிகளுக்கு சொத்து வரி பெயர் மாற்றம், சொத்து வரி நிர்ணயம் செய்தல், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளும், மின்சாரத்துறையின் சார்பில் 145 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய மின் இணைப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வருவாய் துறையின் சார்பில் 166 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதிசான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரசு நலதிட்ட உதவிகள்
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டிகள், தையல் இயந்திரம் என ரூ.1.41 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க கடன் உதவிகளும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு 28,800/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு 68,160/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 43 பயனாளிகளுக்கு காதொலிகருவிகள், செயற்கைக்கால், வங்கி கடன் உதவிகள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ.6.22 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 200 பயனாளிகளுக்கு ரூ.50,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தனிநபர் கோரிக்கை மனு 2878, பல்வகை மனு 11042 ஆக மொத்தம் 13920 மனுக்களில் ஏற்பளிக்கப்பட்ட 5264 மனுக்களில் சுமார் 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு நலதிட்ட உதவிகள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் டி.தழிழ்செல்வன், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சையது ஹமீத், ஆதிதிராவிடர் நல அலுவலர் சாகுல் அமீத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி,  தருமபுரி நகராட்சி ஆணையாளர் சோ.புவனேஸ்வரன், நகர்மன்ற துணைத்தலைவர் அ.நித்யா, தடங்கம் ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா முருகன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: அரசின் சேவைகள், குறு, சக்கர நாற்காலி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தருமபுரி நாகரட்சி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, மக்களுடன் முதல்வர், மின்சாரத்துறை, வங்கி கடன் உதவி
Social Vision February 16, 2024 February 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலாதமிழ்நாடு

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு 

November 17, 2024
ஆரோக்கியம்

விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மருந்தகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை

July 23, 2024
தமிழ்நாடு

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் பி.சண்முகம்

July 14, 2024
இந்தியாசுற்றுலா

செஞ்சிக் கோட்டைக்கு, யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது.

July 12, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவசமாக பயிற்சி பெற  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

June 28, 2024
மாவட்டங்கள்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் 

October 29, 2025

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?