அரகாசனஹள்ளியில் இருந்து பென்னாகரத்திற்கு பேருந்து இயக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் அரகாசனஹள்ளி ஊராட்சிகுட்பட்டது. வீரப்பட்டி.இங்கு 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து பென்னாகரத்திற்கு சுமார் 40 ஆண்டு காலமாக பேருந்து வசதி இல்லை. இப்பகுதி மக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றவில்லை. அரகாசனஹள்ளி ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம்,பத்திரப்பதிவு துறை அலுவலகம், வேளாண்மை துறை மற்றும் வங்கிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்னாகரம் பகுதிக்கு செல்ல வேண்டும்.அரகாசன ஹள்ளியில் இருந்து பென்னாகரம் செல்வதற்கு 40 ஆண்டுளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றதால் ஆவேசமடைந்த பொதுமக்கள், கோரிக்கையை நிறைவேற்ற கோரியும், நிறைவேற்றாவிட்டால் வரும் நாடாளுமன்றத் தோர்தலை புறக்கணிக்கபோவதாக கூறி அப்பகுதி மக்கள், அரகாசன ஹள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

