நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்காக நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியை சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தியிடம் வழங்கினார்.
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் தற்போது மொத்தம் 23 செயற்குழு உறுப்பினர்களும், 3400 சங்க உறுப்பினர்களும் உள்ளனர். பல ஆண்டு கோரிக்கையாக நடிகர் சங்க கட்டடம் கட்டாமல் இருக்கிறது. நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்காக ஏறத்தாழ ரூ.40 கோடி ரூபாய்க்கும் அருகே தேவைப்படும் நிலையில் அந்த பணத்தை திரட்டும் வழிமுறைகள் பற்றியும், பணத்தை திரட்ட நட்சத்திர விழா ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறார்கள் நடிகர் சங்க நிர்வாகிகள்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்கான வைப்பு நிதியை வழங்கி உள்ளார். (15.02.24) அவரது அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை த வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.

