தருமபுரியில் பிப்-18. ல் திமுக பொதுக்கூட்டம்: வெற்றிகரமாக நடத்த மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்.

திராவிட முன்னேற்றக் கழக தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம், தருமபுரியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவர்கள் சி.செலராஜ்,கே.மணோகரன் ஆகியோர் தலைமைவகித்தனர். மாவட்ட கழக செயலாளர்கள் (கிழக்கு)தடங்கம் பெ.சுப்பிரமணி, (மேற்கு) முனைவர் சி.பழனியப்பன் ஆகியோர் சிறப்புறையாற்றினர். கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், பிற அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், பங்கேற்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் – 2024 உரிமைகளை மீட்க “தலைவரின் குரல்” மாபெரும் பொதுக்கூட்டம் பிப்-18. ல் தருமபுரி வள்ளலார் திடலில் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமையில் நடைபெற உள்ளது. இப்பொதுகூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, முன்னாள் அமைச்சர், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி.செல்வகணபதி, முன்னாள் அமைச்சர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன ஆகியோர் சிறப்புறையாற்றுகின்றனர். இப்பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

