மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் பி.துரையை, போலீசார் அடித்து, பொய்வழக்கு பதிந்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.குமார் பேசுகையில்:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், தொட்டாரதஅள்ளியை சேர்ந்தவர் பி.துரை இவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் கிளை செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இவரது தம்பி பிரச்சனை விசியமாக மாரண்ட அள்ளி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.தனது தம்பி ராஜனின் பிரச்சனை குறித்து காவல் ஆய்வாளர் சுப்பிரமணியிடம் பேசியுள்ளார். துரைபேசிக்கொண்டே இருக்கும் போது, எதிர் தரப்புக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவல் உதவி ஆய்வாளர்,ஜீவானந்தம் கார் ஓட்டுனர் சம்பத் ஆகிய மூவரும் சேர்ந்து துரையை சட்டையை கழற்றி கடுமையாக தாக்கப்பட்டார். துரை மீது காவல்துறையினர் தாக்கியதில் துரைக்கு கண் உடல் பகுதி முழுவதும் காயமடைந்துள்ளது. மேலும் கட்டிவைத்து சூ காலல் எட்டி உதைத்து உடல் முழுவதும் அடித்துளார்.இந்த மனித உரிமை மீரலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை காவல் ஆய்வாளர் புரிந்துகொள்ளவேண்டும்.கேள்வி கேட்டாள் தப்பா, காவல் ஆய்வாளர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா என கேள்விஎழுப்பினார்.காசுஉள்ளவர்களுக்கு ஒரு சட்டம் நீதி என சிலஅதிகாரிகள் செயல்படுகின்றனர்.காவல்துறையில் சில அதிகாரிகள் அதிகாரம் என்பது சட்ட ஒழுங்கை பாதுகாக்க அல்ல. காசு சம்பாதிக்கத்தான் என செயல்படுகின்றனர். அத்துமீறி நடந்துகொண்ட மாரண்ட அள்ளி காவல் ஆய்வாளரின் செயல் கண்டிக்கத்தக்கது.
எனவே துரை மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெறவேண்டும். துரையை, கடுமையாக தாக்கி, மனித உரிமையை மீறிய, காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ஜீவானந்தம், காவலர் சம்பத் ஆகிய மூவர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.துரைக்கு நீதி கிடைக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என பேசினார்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன், வட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.நக்கீரன், என்.சந்திரசேகரன்,வழக்குறிஞர் பி.கோவிந்தசாமி, ,சி.ராஜா,ஜி.பாண்டியம்மாள்,பி.முருகன்,பி.காரல்மார்க்ஸ், ஏ.சமது, என்.வரதராஜன்,சி.கோவிந்தராஜ், உள்ளிட்டோர் பேசினர்.

