தமிழ்நாட்டை சார்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்று டெல்லி பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகித்தவர் எல்.முருகன். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தம்மை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் எல். முருகன். தற்போது தமிழ்நாடு அமைச்சராக திமுகவின் கயல்விழி பதவி வகிக்கிறார். எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக இருந்து வருகிறார்.
2021-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். பிறகு ராஜ்யசபா எம்பியான எல்.முருகன், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சரானார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார் எல்.முருகன்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் நீலகிரி லோக்சபா தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்பது பரவலாக பேசப்பட்டது வந்தது. ஆனால் அதற்க்கு தற்போது போட்டி இல்லை என்று பிஜேபி தலைமையிடம் அறிவிதுள்ளது. நீலகிரி சட்டமன்ற லோக்சபா தொகுதியில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தற்போது எம்பியாக இருந்து வருகிறார். பாஜகவை மிக கடுமையாக கொள்கை ரீதியில் விமர்சித்து வருபவர் ஆ.ராசா. நீலகிரி தொகுதியில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடவே அதிக வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.

