நியாயவிலை கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் நிலக்கடலை எண்ணெய் வழங்ககோரி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் மணி(எ) யோகனநதன், மாவட்ட பொருளாளர் சக்திவேல்,மாநில இளைஞர் அணி செயலாளர் உதயகுமார்,கெயில் குழாய் பதிப்பு எதிர்ப்பு இயக்க தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தமிழ்நாடு அரசின் நியாயவிலை கடைகளில் இந்தோனேசியா- மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதிலாக தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் தோங்காய் எண்ணெய் நிலக்கடலை எண்ணெய் மானிய விலையில் குடும்ப அட்டைதாரருக்கு வழங்ககோரி மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோரை தருமபுரி நகர போலீசார் கைது செய்தனர்.


