பைனான்ஸ் கட்ட முடியாத விரக்தியில் மேஸ்திரி தற்கொலை
பாலக்கோடு அடுத்த கடகத்தூரை சேர்ந்த மேஸ்திரி மணிகண்டன், (33)இவர், 6 வருடத்திற்கு முன் பழைய வீட்டை புதுப்பிக்க, தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடமான கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெங்களூரில் வேலை செய்யும் போது தவறி விழுந்ததில் அடிபட்டு சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். மேலும், தற்போதைய சூழலில் கடனை எப்படி கட்டுவது என அவருடைய மனைவி கௌரிடம் புலம்பியுள்ளார். இந்நிலையில்,வீட்டினுள் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

