காரிமங்கலம் அருகே பைக் திருட்டு
காரிமங்கலம் அடுத்த குட்டூரை சேர்ந்த அசோக், 21; இவருடைய பஜாஜ் பல்சர் பைக்கை கடந்த வருடம் அக்., 15 அன்று இரவு காரிமங்கலம் டவுன் கோடலம்மன் கோவில் தெருவில் உள்ள, ஞானசேகரன் என்பவரின் வீட்டின் முன், நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக் காணவில்லை இது குறித்து, புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

