மாற்றுத்திறனுடைய தடகள வீராங்கனையான தங்கை கலைச்செல்வி கேலோ இந்தியா போட்டிகள் உட்பட இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 8 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாகவும், அவருக்கு நவீன சக்கர நாற்காலி வாங்குவதற்காகவும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பில், ரூ. 8.24 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி வழங்கினார். இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி வாழ்த்தினார்.

