குடிமக்கள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூகத்திற்கான இலவச சட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
சிவிஎம்சி, செயலாளர் த.லதா தலைமை வகித்தார். சங்க நிர்வாகி நஞ்சுண்டன் முன்னிலை வகித்தார்.
தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத்தலைவர் ச.கருப்பையா சிறப்புரையாற்றினார். சிவிஎம்சி தலைவர் எஸ்.கே.மூர்த்தி, துணைத்தலைவர் வி.எஸ்.குமரேசன்,நிர்வ்கி எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தலித் மக்கள் சாதிய வன்கொடுமையால் ப்திக்கப்படும் போது எஸ்சி/எஸ்டி,வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக பொறுத்த வேண்டும்.
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி தீர்ப்பில் நீதிமன்றம் உத்தரவு படி வாச்சாத்தியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை ரூ 10 இலட்சம் நிவாரணம் ,பொருளாதார மேம்பாடு போன்றவற்றை தமிழக அரசு உடனடியாக செய்து கொடுக்கவேண்டும். எஸ்சி/எஸ்டி,வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்படும் விழிகண்குழு கூட்டத்தை முறையாக நடத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

