நளப்பன நாய்க்கனஅள்ளி கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் தருமபுரி டாஸ்மாக் பொதுமேலாளரிடம் மனு கொடுத்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குஉட்பட்டது. சஜ்ஜலஅள்ளி ஊராட்சி .இவ் ஊராட்சிக்குட்பட்ட நளப்பநாய்க்கன அள்ளி கிராமத்தில் சுமார் 500 கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் இதே பகுதியில் பாப்பாரப்பட்டியில் மூன்று டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது, இதில் இரண்டு கடைகள் ஏற்கனவே வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது, இந்நிலையில் பாப்பாரப்பட்டியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறவுள்ள நிலையில் பாப்பாரப்பட்டியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினை நளப்பநாய்க்கனஅள்ளி கிராமத்திற்கு மாற்றிட தேவையான நடவடிக்கைளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் தங்களது கிராமத்திற்குள் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என தெரிவித்த நளப்பநாய்க்கன அள்ளி கிராம மக்கள் தருமபுரியிலுள்ள டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரியை நேரில் சந்தித்து தங்களது கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று குறிப்பிட்டு புகார் மனு ஒன்றினை அளித்தனர்,
மனுவை பெற்றுக் கொண்ட டாஸ்மாக் மேலாளர் நளப்பநாய்க்களஅள்ளி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
