காரிமங்கலம் சாமிகோவில் தெருவை சேர்ந்த ரம்யா, 24 இவர் படித்து முடித்து விட்டு பழைய தர்மபுரி அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஜனவரி 27 அன்று முதல் காணவில்லை. இது குறித்து, அவருடைய பெற்றோர் அளித்த புகார் படி காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதே போல் தர்மபுரி கோல்டன் தெருவைச் சேர்ந்த சத்யா, 19 இவர் தர்மபுரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயோ டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் சத்யாவை காணவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகார் படி தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

