தருமபுரி நகரம் டாக்டர் அம்பேத்கர் காலனியில் உள்ள ஓம் ஸ்ரீ சிம்மவாகன மாரியம்மன் திருக்கோயில், புதுபிக்கும் பணியை செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பக்தர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்துள்ளனர்.
தருமபுரி நகரம் 30 ஆவது வார்டுக்கு உட்பட்டது.டாக்டர் அம்பேத்கர் காலனி, இங்கு ஓம் ஸ்ரீ சிம்மவாகனமாரியம்மன் திருக்கோயில் உள்ளது.இந்த கோயிலில் சுமார் 40 ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.இந்த கோயிலுக்கு வருடா வருடம் ஆடி மாதத்தில் விழா நடத்தி வருகிறோம். இவ்விழாவிற்கு உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல் வெளியிரிலிருந்தும் பக்கதர்கள் வழிபட வருகின்றனர். சுமார் 3 தலைமுறைகளாக வழிபட்டு வரும் இக்கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.இப்பணியை இதே பகுதியை சேர்ந்த சிலர் திருக்கோயில் புதுப்பிக்கும் பணியை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.மேலும் பக்தர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
எனவே திருக்கோயில் புதுப்பிக்கும் பணியை செய்ய பாதுகாப்பு அளிக்கவேண்டும். புதுப்பிக்கும் பணியை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
