கண்ணே குப்பம் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்திருந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கும்மனூர் ஊராட்சிக்குபட்டது.தண்டே குப்பம் கிராமம் . இங்கு 30 கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இந்த கிராமத்தில் உள்ள ஒருவரின் பட்டா நிலத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் போர்வெல் அமைத்துள்ளனர். இதனால் அந்த நபர் தண்ணீர் தர மறுத்து வருகிறார். தண்ணீர் இல்லாமல் குழந்தைகள் குளிக்கமுடியவில்லை குளிகாகாமலேயே குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலமை உள்ளது.மேலும் குடிநீருக்காக விவசாய கிணறுகளுக்கு நடந்து சென்று எடுத்துவர வேண்டியுள்ளது. இப்பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. போர்வெல் மூலம் குடிநீர் பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் முறையிட்டுள்ளனர்.

