ஒரிசாவிலிருந்து கடத்தி வந்த 101 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது.
கல்லூரி மாணவர்களுக்கு விற்க திட்டம்
சென்னை அருகே தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர். அ.அமல்ராஜ் உத்தரவிட்டார். இதன் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அவர்களுக்கு 11.02.2024 ஆம் தேதி வெளிமாநிலத்திலிருந்து ரேடியல் ரோடு வழியாக கார்களில் கஞ்சாவை கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ரேடியல் ரோடு காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் வாகன தணிக்கை செய்தனர்.அப்போது வெளிமாநில பதிவெண்கள் கொண்ட இரு கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் 101 கிலோ எடை கொண்ட ரூபாய் பத்து இலட்சத்து பத்தாயிரம் மதிப்புள்ள கஞ்சா இருந்தது.
அதனை தொடர்ந்து வாகனத்திலிருந்த மூன்று நபர்களை விசாரணை செய்ததில் 1. ஜீபன் பிஸ்வாஸ் வ/30, த/பெ. பாரத் பிஸ்வாஸ், ஒரிசா. 2. பலராம் புஜாரி வ/25, த/பெ. டயா புஜாரி, ஒரிசா 3. சாஷி குமார் வ/32 த/பெ நாக செட்டி,கர்நாடகா என தெரியவந்தது .
அவர்கள் அந்த கஞ்சாவினை ஒடிசா மாநிலத்திலிருந்து வாங்கி வந்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், கல்லூரி மாணவர்களுக்கும் சில்லறை விற்பனைக்கு எடுத்துசெல்வதாக கூறியதை தொடர்ந்து அவர்களை கைது செய்தனர். கஞ்சாவை கொண்டு வர பயண்படுத்திய இரு கார்களையும், அவர்கள் வைத்திருந்த கஞ்சாவையும் கைப்பற்றுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி கைப்பற்றப்பட்டது. இது சம்மந்தமாக பள்ளிக்கரணை மதுவிலக்குஅமலாக்க பிரிவில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.
