அனுமந்தீர்த்தம் முதல் கருக்கம்பட்டிவரை உள்ள, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி கையெழுத்து இயக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் காட்டேரி ஊராட்சி உள்ளது.இந்த ஊராட்சிக்குட்பட்ட அனுமந்தீர்த்தத்தம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மேல் இலக்கம்பட்டி, ஒன்னகரை, ஆலமரத்தூர், கருக்கம்பட்டி வரை உள்ள 5 கிலோ மீட்டர் தார் சாலை பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
இந்த தார் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.மழைகாலங்களில் தார்சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதானல் நடந்து செல்வோரும் வாகனத்தில் செல்வோரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த குண்டும் குழியுமாக உள்ள பழுதடைந்த சாலையை, தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய தார் சாலை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டேரி ஒன்றிய கவுன்சிலர் வி.கோவிந்தசாமி தலைமையில் அப்பகுதி கிராம மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது.
இதில் விவசாய தொழிலாளர் சங்க வட்ட குழு உறுப்பினர்கள் வி.ஆறுமுகம் ,என். சுந்தரம் , ஆனந்தபாபு ,பி.வரதராஜ் பங்கேற்றனர். இந்த கையெத்து இயக்கத்தை விவசாயிகள் சங்க தலைவர் மணல்காடு இராமலிங்கம் கையெழுத்திட்டு துவக்கிவைத்தார்.

