பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.
1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்புஉயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.

தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் 90 சதம் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகல்வித்
துறை அரசாணை எண்: 243
நாள் : 12.12.2023 ஐ
உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள். தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள்.
கனிணி இயக்குபவர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எம்ஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள். ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்-15 அன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம்
மற்றும் 26.02.2024 முதல்காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தையும்வெற்றிகரமாக நடத்துவது என வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டது.

ஆயத்த மாநாட்டிற்கு
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்
எம்.சுருளிநாதன்,பி.எம்.கெளரன்,
ஆகியோர் தலைமைவகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.சேகர் வரவேற்று பேசினார்.
தமிழக ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் இராசா.ஆனந்தன் துவக்கிவைத்து பேசினார்.
ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மகளிர்துணைககுழு அமைப்பாளர் பி.எஸ்.இளவேனில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் எம்.முகமது இலியாஸ் ,தமிழக ஆசிரியர் கழக வட்ட தலைவர் குபேந்திரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் கு.ராஜராஜன்,தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் இரா.சிவக்குமார், தமிழ்நாடு வேளாண்மைதுறை அமைச்சு பணியாளர் சங்க மாநில செயலாளர் ஆர்.ஜெயவேல், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பி.மகேஸ்வரி, தமிழ்நாடு பொதுநூலகத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.முனிராஜ், வட்ட நிர்வாகிகள்
ஆர்.முருகன்,எம்.திம்மராயன்,எம்.ரமேஷ்,எம்.அன்பழகன்,சத்துணவு ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்ட நிர்வாகி சி.காவேரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் இலா.தியோடர்.
இராபின்சன் நிறைவுறையாற்றினார்.

