பிஎஸ்என்எல், எம்ளாயீஸ் யூனியன் வேலை நிறுத்த கருத்தரங்கம்.
பிஎஸ்என்எல், எம்ளாயீஸ் யூனியன், சார்பில் பிப்-16 அன்று நடைபெற உள்ள, அகில இந்திய வேலைநிறுத்த போராட்ட விளக்க கருத்தரங்கம், தருமபுரியில் நடைபெற்றது.
ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.கோபாலன் தலைமை வகித்தார்.ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் டி.பாஸ்கரன் வரவேற்றார்.பிஎஸ்என்எல் எம்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன் துவக்கிவைத்து பேசினார்.
முன்னாள் மாநிலதுணைத்தலைவர் எம்.நாராயணசாமி கருத்துரையாற்றினார்.
மாநிலதுணைத்தலைவர்கள் எம்.பாபு ,எஸ்.ஹரிகரன்,மகளிர்துணைக்குழு அகில இந்திய நிர்வாகி ஜி.உமாராணி, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பரிதிவேல் செயலாளர் ஆர்.பழனி மாவட்ட நிர்வாகிகள் எம்.குப்புசாமி ,ஜி.மணி ,சி.முனிராஜ்,ஆகியோர் பேசினர்.

பிஎஸ்என்எல் சேவையை மேம்படுத்த 4-ஜி வழங்கவேண்டும்.பிஎஸ்என்எல் நிறுவனத்தில், பணியில் உள்ளவர்களுக்கு 3 – ஆவது சம்பள மாற்றம், ஓய்வுபெற்றவர்களுக்கு பென்சன் மாற்றம் 2017 ஜனவரி 1 ம் தேதி முதல் வழங்கவேண்டும்.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் மற்றும் விவசாய விரோத, கொள்கைகளை கண்டித்து, பிப்-16 ல் நடைபெற உள்ள, அகில இந்திய வேலை நிறுத்தத்தை, தருமபுரி மாவட்டத்தில் வெற்றியடைய செய்து என முடிவு செய்யப்பட்டது.

