ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை வே.சம்பத்குமார் எம்எல்ஏ,துவக்கிவைத்தார்.
மொரப்பூர் அருகே ஆர்.எஸ் தொட்டம்பட்டியில், சிமெண்ட் சாலை அமைக்க பூமிபூஜை சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்குபட்ட மொரப்பூர் ஒன்றியத்தில் ஆர்.எஸ்.தொட்டம்பட்டி உள்ளது. ஆர்.எஸ்.தொட்டம்பட்டி ரயில்வே மேம்பாலம் முதல் மெயின் ரோடு வரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியினை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் தொடக்கிவைத்தார் இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட கவுன்சிலர் கே.கே.தனபால், மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
