ரயில்வே துறையில் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் பெரும்பாலும் இருக்கையில் தமிழ்நாட்டில் முதல் திருநங்கை தமிழ்நாட்டில் முதல் திருநங்கை நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

ரயில்வே துறையில் சாதிக்க வேண்டும் என என்னும் திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக சிந்து விளங்குகிறார். ரயில்வே பணியில் அனுபவத்தை பற்றி பகிர்கையில், 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரயில்வே பணியில் சேர்ந்தேன். பிறகு 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந்து ரயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினேன். மின்சார பிரிவிலிருந்து பிறகு வணிகப்பிரிவுக்கு மாற்றப்பட்டேன். பின் டிக்கெட் பரிசோதனை பயிற்சியை முடித்து இன்று டிக்கெட் பரிசோதராக பொறுப்பேற்றுள்ளேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும் என்றும், திருநங்கைகள் மனம் தளரக்கூடாது என்றும் தெரிவித்தார்.

