மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து எதிர்கட்சிகள் ஆளக் கூடிய மாநிலங்களுக்கு உரிய நிதி பகிர்வு அளிக்க மறுப்பது. பேரிடர் நிவாரண நிதி ஒதுக்க மறுப்பது, ஜி.எஸ்.டி. வரியில் உரிய பங்கீடு ஒதுக்க மறுப்பது, மாநிலங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது உள்ளிட்டு கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, மாநில ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கமாக செயல்பட வைப்பது உள்ளிட்டு ஜனநாயக விரோத எதேச்சதிகார நடவடிக்கையினை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக தமிழ்நாட்டை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயலாலும், பெருமழையாலும் விவசாயம், வேலையிழப்பு, கால்நடைகள் இறப்பு,வாழ்விட இழப்பு என உயிரைப் பிடுங்கிச் சென்ற பேரிடருக்கு ஒன்றிய அரசோ வாய்வார்த்தைகளைத் தவிர வேறொன்றையும் வழங்காததைக் கண்டித்து பிஜேபி அரசை கண்டித்து டில்லியில் நாடாளுமன்றம் முன்பு தமிழக எம்.பி க்கள் போராட்டம்.
