பாலக்கோடு ஸ்ரீ புதூர்பொன்மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பந்தகால் நடும் விழா
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீபுதூர்பொன்மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் பெளர்ணமியை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம்,
இந்த ஆண்டு வரும் வரும் பிப்ரவரி மாதம் 19 ம் தேதி தொடங்கி 23 ம் தேதி வரை ஸ்ரீபுதூர் பொன் மாரியம்மன் திருவிழா நடைப்பெறுவதையொட்டி இன்று திரெளபதியம்மன் கோயில் வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து பந்தக்கால் நட்டு கொடியேற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் 12 கிராம ஊர்கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள், தர்மகர்த்தா, ஊர்முக்கிய பிரமுகர்கள், ஸ்ரீபுதூர் பொன்மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்ற இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

