தருமபுரி 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடியில் வங்கிக்கடன் ஆட்சியர் வழங்கினார்.

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை ஈரோட்டில் இன்று தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தருமபுரி மாவட்ட ஊரகப்பகுதியை சேர்ந்த 178 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20.88 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உதவிகளையும், நகரப்பகுதியில் 112 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.11.60 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உதவிகளையும், 57 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.21.60 இலட்சம் மதிப்பீட்டில் தனிநபர் தொழில்முனைவோர் கடன் உதவிகளையும், 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.9.60 இலட்சம் மதிப்பீட்டில் மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் என மொத்தம் 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
இவ்விழாவில் தருமபுரி மாவட்ட ஊரகப்பகுதியை சேர்ந்த 178 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20.88 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உதவிகளையும், நகரப்பகுதியில் 112 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.11.60 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உதவிகளையும், 57 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.21.60 இலட்சம் மதிப்பீட்டில் தனிநபர் தொழில்முனைவோர் கடன் உதவிகளையும், 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.9.60 இலட்சம் மதிப்பீட்டில் மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் என மொத்தம் 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் சா. பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், நல்லம்பள்ளி ஒன்றியக் குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சிகளின் தலைவர்கள், தடங்கம் ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா முருகன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

