வேலையில்லாதிண்டாட்டம் “காலபேரிடர்” கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை
வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், சேவைதுறையில் ரோப்போக்களின் ஆதிக்கம் குறித்தும், அதனால் உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, கவிஞர் வைரமுத்து, தனது எக்ஸ் பக்கத்தில், தெரிவித்துள்ளதாவது .
ஓர் எச்சரிக்கை
உலகம் இருபெரும்
துறைகளால் இயங்குகிறது
ஒன்று உற்பத்தித்துறை
இன்னொன்று சேவைத்துறை
சேவைத்துறையில் மனிதர்களை இடப்பெயர்ச்சி செய்யத்
தொடங்கிவிட்டன ரோபோக்கள்
சில ஆண்டுகளில்
முற்றிலும் பரவிவிடக்கூடும்
உற்பத்தித் துறையிலும்
ரோபோக்கள் ஆதிக்கம் பெற்றுவிடில்
உலகம் சந்திக்கப் போகும்
மிகப்பெரும் எதிர்விளைவு
வேலையில்லாத் திண்டாட்டம்
எண்ணூறு கோடி
மக்கள்தொகை கொண்ட உலகு
என்ன செய்யும்?
அறிவுலகம் ஆட்சி உலகம்
இரண்டும் சந்திக்க வேண்டிய
‘காலப்பேரிடர்’ இது
என குறிப்பிட்டுள்ளார்.

