அமைச்சர் ராஜகண்ணப்பன் கணொலிவாயிக திறந்துவைத்ததை தொடர்ந்து பாலக்கோடு மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், தண்டுகாரண அள்ளியில் பாலக்கோடு அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவர் விடுதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
மாவட்டத்தில் 63 கல்வி விடுதிகள் இயங்கிவருகிறது
தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 63 கல்வி விடுதிகள் இயங்கி வருகிறது. இவ்விடுதிகளில் 56 விடுதிகள் சொந்தக் கட்டடங்களிலும் 7 விடுதிகள் தனியார் கட்டடங்களிலும் இயங்கி வருகிறது. இதனை தொடர்ந்து பாலக்கோடு,அரசுமிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவர் விடுதிக்கு சொந்தக் கட்டட கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்டது.
மேலும் பாலக்கோடு, அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவியர் விடுதிக்கு சொந்தக் கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்றும் வருகிறது. தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் மீதமுள்ள 5 விடுதிகளுக்கு அரசால் நிதி ஒதுக்கிடு செய்து வரப்பெற்றவுடன் சொந்தக் கட்டட கட்டுமான பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.
புதியதாக திறக்கப்பட்டுள்ள இந்த விடுதியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக 27 அறைகள் மற்றும் 12 குளியலறைகள் மற்றும் 12 கழிவறைகள், 1 சமையலறையுடன் மேற்படி 3 அடுக்குமாடி விடுதிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
5 விடுதிகள் திறப்பு
தமிழ்நாட்டில் இராமநாதபுரம் , தருமபுரி , பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு விடுதியும் தென்காசி மாவட்டத்தில் 2 விடுதிகளும் என மொத்தம் 5 விடுதிகளைமாணவர்களின் பயன்பாட்டிற்காகபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, புதியதாக திறக்கப்பட்ட பாலக்கோடு அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவர் விடுதியில் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் பாலக்கோடு சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் ஆகியோரால் குத்துவிளக்கேற்றி வைக்கப்பட்டு, பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

