தருமபுரியில் பிப்-8 அன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்- 8 அன்று காலை 10.00 மணிக்கு ஈரோட்டில் இருந்து காணொலி காட்சியின் வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகளை வழங்கி தொடங்கி வைக்க உள்ளார்.
அதனை தொடர்ந்து, காலை 10 மணிக்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்க உள்ளார்.

