நீண்ட நாள் ஆயுள் கைதிகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த 10 இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் விடுதலை என்கிற அறிவிப்பை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா அமைச்சர் உதயநிதியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

2021-ல் தமிழக அரசு அமைந்தது முதல் நீண்ட நாள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளை, அண்ணா பிறந்த நாளின் போது நன்னடத்தை அடிப்படையில் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் அவர்களின் தலைமையில் குழு அமைத்து – அக்குழுவின் பரிந்துரைப்படி 49 நீண்ட நாள் சிறைவாசிகளை விடுவிக்க ஆளுநருக்கு கோப்பு அனுப்பியது. -ஆளுநர் முடிவு எடுக்காத சூழலில், உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி வருவது போன்ற தமிழக அரசின் நடவடிக்கை எடுத்துள்ளதற்க்காக பாராட்டினார்கள்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் – சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாகிருல்லா அவர்கள் மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் உதயநிதியை சந்தித்து தமிழ்நாடு அரசுக்கும் – முதலமைச்சருக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.

