2024-நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி, முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவினர் ஒசூர் வருகை.
கழக துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி,எம். பி அவர்களின் தலைமையில், கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கழக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர், கழக சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், தொழில்துறை அமைச்சர், கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.இராஜா, அரசு கொறடா வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.எழிலரசன், அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவினரின் முன்னிலையில் கருத்துக் கேட்பு கூட்டம் வருகின்ற 09.02.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணி அளவில் ஓசூர் கிரான்ட் பேலஷில் நடைபெற உள்ளது.
அதுசமயம் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழில்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களும் நாளை 08.02.2024 வியாழக்கிழமை மதியம் 12.00 மணி அளவில் தருமபுரி மாவட்ட கழக அலுவலகம் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் 09.02.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணி அளவில் ஓசூர் கிரான்ட் பேலஷில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரின் தலைமையில் நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டத்திலும் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பெ. தடங்கம் சுபிரமணி தெரிவித்துள்ளார்.
மேலும் 09.02.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணி அளவில் ஓசூர் கிரான்ட் பேலஷில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரின் தலைமையில் நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டத்திலும் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பெ. தடங்கம் சுபிரமணி தெரிவித்துள்ளார்.
