ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்ச்கங்கம் சார்பில் அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2021 மார்ச் முதல் இன்று வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்கவேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழநாக வேண்டும், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வார ஓய்வுஊதியம் வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தினை 3 வருடங்களில் இருந்து 4-ஆண்டுகளாக மாற்றியதை திரும்ப பெற வேண்டும், போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணி பழுவை குறைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்பாட்டதிற்க்கு மண்டல செயலாளர் எம். பி. லட்சுமணன் தலைமை வகித்தார். அதிமுக கழக அமைப்பு செயலாளரும் மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் தருமபுரி ஏ. கோவிந்தசாமி,அரூர் வி. சம்பத்குமார், நகர கழக செயலாளர் பூக்கடை ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினார். விவசாய அணி மாநில தலைவர் டி. ஆர். அன்பழகன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் துணைதலைவர் டி.ஜெ.விஜய் வெங்கடேஷ், பாட்டாளி தொழிற்சங்க மண்டல பொதுச்செயலாளர் ஜி.ராஜா, பிஎம்எஸ் மண்டல செயலாளர் எம். மாது, அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் என்.சிவம், மண்டல இணை செயலாளர் சி.கருணாநிதி, மண்டல துணை செயலாளர்கள் கே.காமராஜ் , எம் . மரகதவேல்,பி.சரவவணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மண்டல பொருளாளர் டி. முனிரத்தினம் நன்றி கூறினார்.
