உதகை விபத்து 7 பேர் உயிரிழப்பு,உயிரிழந்த குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்குக
எடப்பாடி பழனிச்சாமி

உதகை அடுத்த லவ்டேல் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் புதிய வீட்டிற்க்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. புதிய வீட்டுக்கான கழிவறை அமைக்கும் பணியில் 7 பெண்கள் உட்பட 8 கட்டுமான பணியாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் கழிவுறைக்காக தோண்டப்பட்ட குழியின் அருகே மண் சரிவு ஏற்பட்டு பணியாளர்கள் மீது விழுந்தது. இதில் 8 பேரும் மண்ணில் உயிருடன் புதைந்தனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

உயிரிழந்தவர்களில், சங்கீதா (35), சகீலா (36), பாக்கியா (36), உமா (35), முத்துலட்சுமி (35) என்பவர்களின் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மற்றவர்கள் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7 பேர் உயிரிழப்பு சம்பவம் உதகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் :
உதகை- லவ்டேல் பகுதியில் தனியார் கட்டிட கட்டுமான பணிக்கிடையே நடந்த நிலச்சரிவில் 7பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மலைப்பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கொடுக்கும் போது, அந்த இடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதுடன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்

